Seenapuram & Thingalur Jain Temple

Seenapuram Jain Temple:-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் சீனாபுரம் கிராமம் உள்ளது. பெருந்துறையிலிருந்து 9 கி.மீ தொலைவிலும் ஈரோட்டிலிருந்து 28 கி.மீ தொலைவிலும் உள்ளது. பெருந்துறையிலிருந்து திங்களூர் செல்லும் வழியில் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 2 கி.மீ தொலைவில் வலது புறம் அமைந்துள்ளது பவணந்தி முனிவர் வாழ்ந்த இடம்.
தொல்காப்பியத்திற்கு பிறகு தமிழில் நன்னூல் என்ற ஆகச்சிறந்த இலக்கண நூலை இயற்றியவரான பவணந்தி முனிவர் பிறந்து வாழ்ந்த சனகாபுரத்தை அந்த காலத்தில் மக்கள் ஜினாபுரம் என அழைத்ததாகவும். பிற்காலத்தில் இதுவே மருவி சீனாபுரம் என தற்போது அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பவணந்தி முனிவரால் போற்றி பாடப்பெற்ற ஸ்ரீஆதிநாதர் கோவில் இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. காலத்தை வென்ற வரலாற்று நினைவு சின்னமாக இந்த சமண கோவில் உள்ளது. இங்கு சென்றால் நேர்மறை எண்ணங்களும், மன அமைதியும் நிச்சயம் கிடைக்கும் என இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
Thingalur Jain Temple:-
திங்களூர் பூமண சுவாமி கோவில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திங்களூர் கிராமத்தின் (அஞ்சல் குறியீடு 634961) தென்பகுதியில் சுங்கக்காரன்பாளையத்தை ஒட்டி உள்ள தோட்டத்தின் நடுவே அமைந்துள்ளது. சமணசமயத்தின் ஒன்பதாவது தீர்த்தங்கரான புஷ்பதந்தர் இக்கோவிலின் மூலவராவார்