Blog
திருப்பூர் – கோவை விமான நிலையம் இடையே, ஷட்டில் சேவை துவக்கம்

திருப்பூர் – கோவை விமான நிலையம் இடையே ஷட்டில் சேவை துவக்கப்பட உள்ளது. ஆர்டர் விசாரணை, கண்காட்சிகள், தொழிற்சாலைகள் ஆய்வு, தொழிலாளர் வசதியை பார்வையிடுவது என, ஒவ்வொரு வாரமும், வெளிநாட்டினர் திருப்பூர் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளில் மட்டுமே, இதுபோன்ற ‘ஷட்டில்’ சேவை கிடைக்கும். நம் நாட்டில் முதன்முறையாக, கோவை – திருப்பூர் இடையே துவங்கப்படுவது வரவேற்புக்குரியது. ‘லக்கேஜ்’ வசதிகளுடன் வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளன. அதிநவீன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய வாகனத்துடன், 599 ரூபாய்க்கு வாகன சேவை வழங்குகிறது.கோவையை சேர்ந்த இளைஞர்கள் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர் . நாளை (17.07.24 ) தேதி முதல் ‘ஷட்டில்’ சேவை துவங்குமென அறிவித்துள்ளனர்.
