Blog
திருப்பூர் அவிநாசியில் வெறிநாய்க்கடி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

நேற்று 28.09.2023 வெறிநாய்க்கடி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வீட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை அவினாசி ரோட்டரி எங் ஜெனரேஷன், அவிநாசி கால்நடை மருந்தகம் மற்றும் அவிநாசி பேரூராட்சி இணைந்து நடத்தினார்கள்.
இம்முகாமில் சிறப்பு வழக்கறிஞர் திரு .மோகன் அவர்கள் தம்பி செல்வன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் ,பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இம்மாதிரியான பல்வேறு அமைப்புகள் மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல செயல்பாடுகளை செய்து வருவது அவிநாசி மக்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றது.