
நேற்று (28.09.2023) மாலை வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் 31வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் மதிப்பு மிக்க முருகநாதன் ஐயா தலைமை வகித்தார்.
மேலும் தமிழ் இலக்கிய விருதுகள், சிறந்த 8 நூலாசிரியர் பெருந்தகைகளுக்கு மாண்புமிகு நீதியரசர் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் அவர்கள் கரங்களால் வழங்கினார்.
இந்த ஆண்டு இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் 5 பேரையும் கௌரவப் படுத்தினார்கள் .இவ்விழாவில் நீதியரசர் அவர்களுக்கு பாரதியார் கவிதை நூலை வழங்கினார்கள்.
இவ்விழாவைத் தொடர்ந்து கிட்ஸ் கிளப் பள்ளியின் சேர்மன் திரு.மோகன் கார்த்திக் சார் அவர்களது பிறந்த நாள் விழா நடைபெற்றது.