சீனாபுரம் சமணர் கோவில் | Seenapuram Jain Temple

பெருந்துறையிலிருந்து  இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சீனாபுரம் சமணர் கோவில் உள்ளது, முதல் தீர்த்தங்கரான ஸ்ரீ ஆதிநாதருக்கான எழுப்பப்பட்டது இந்த கோவில்.

தொல்காப்பியத்துக்குப் பிறகு ஆகச்சிறந்த நூலான நன்னூலை எழுதிய பவணந்தி முனிவர் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலம் இதுவாகும். இதற்கு ஆதாரமாக இந்த கோவிலுக்கு அருகிலேயே பவணந்தி முனிவர் வழிபாடு செய்யப்பட்ட ஸ்தலம் என்ற அறிவிப்பு பலகை நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்டுள்ளது.

அதோடு பவணந்தி முனிவர் பிறந்து வாழ்ந்த சனகாபுரத்தை அந்த காலத்தில் மக்கள் ஜினாபுரம் என அழைத்ததாகவும். பிற்காலத்தில் இதுவே மருவி சீனாபுரம் என தற்போது அழைக்கப்படுகிறது.

காலத்தை வென்ற வரலாற்று நினைவு சின்னமாக இந்த சமண கோவில் உள்ளது. இங்கு சென்றால் நேர்மறை எண்ணங்களும், மன அமைதியும் நிச்சயம் கிடைக்கும் என இந்த பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது.

Exit mobile version