பெருந்துறையிலிருந்து இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் திங்களூர் சமணர் கோவில் உள்ளது. இந்த சமணர் கோவில் 9வது தீர்த்தங்கரான புஷ்பதந்தர் தீர்த்தங்கரர்காக கட்டப்பட்டுள்ளது. சிறிய கருங்கல் சிலையாக மூலவர் சிலை உள்ளது. அதற்குப் பின்புறமாகவே பளிங்கினால் ஆன வெண்சிலை உள்ளது.
இந்த கோவிலுடைய மகா மண்டபத்தில் பிரம்மதேவர் சிலை உள்ளது. தூண்களில் விநாயகர், முருகன், மயில் முதலிய சிற்பங்கள் உள்ளது.
இந்தக் கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளது. முதல் கல்வெட்டு கோவிலின்எதிரில் உள்ளது. இரண்டாவது கல்வெட்டு சிறிது தூரத்தில் ஒரு கல்லில் இருக்கிறது. இரண்டு கல்வெட்டுகளுமே இக்கோவிலை எழுப்பியவர்களும் மற்றும் அதற்கு உதவி செய்தவர்களுக்கான கல்வெட்டு செய்தியாகும்.
