திருப்பூர் – காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவிநாசி அரசு பொது மருத்துவமனை  சுற்றுச்சுவரை தூய்மைப்படுத்தி வண்ணம் தீட்டும் பணி

இந்தியாவின் தேசத் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியின்  154 வது பிறந்த தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அவரது  முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார வாழ்க்கையினை வலியுறுத்தும் வகையில் ,அவிநாசியில் உள்ள அரசு பொது மருத்துவமனையை தூய்மை செய்திட நல்லது நண்பர்கள் அறக்கட்டளை மூலமாக  முடிவு செய்யப்பட்டது.

அரசு மருத்துவ மனையின்  சுற்றுச்சுவர்  முழுமையாக சுவரொட்டிகளால் மிகவும் தூய்மையற்ற நிலையில் இருந்தது. இதை கருத்தில் கொண்டு இன்று 02.10.2023  காலை 8 மணி முதல் சுத்தம் செய்திட ஆரம்பித்து சுவர் முழுமையாக வர்ணம் தீட்டி அழகு செய்யப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில்  நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் .திரு.ரவிக்குமார்         அவர்கள் ,பொறுப்பாளர் ஜீவானந்தம் மற்றும்  திரு.கர்ணன், திரு.ஜெயவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பணி செய்தனர் .

Exit mobile version