திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் அவர்கள் பணியிட மாற்றம்

திருப்பூர் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் அவர்கள் விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் புத்தக திருவிழா, பொங்கல் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை கூடவே துணை நின்று திறம்பட நடத்தியவர். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், பல்லடம் அருகே |அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்தல் மற்றும் இது போன்ற சிறப்பான முன்னெடுப்புகளை எடுத்துள்ளார். திருப்பூர்

திருப்பூர் மக்களால் அனைவராலும் பாராட்டப்பெற்ற இவர் புதிய பணியிலும் திறம்பட செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்தி வணங்குகிறோம்.

Exit mobile version