செஞ்சேரிமலை அருள்மிகு ஸ்ரீ மந்தரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில்.

செஞ்சேரிமலை என்பது தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில், சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இங்கு மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில்.

இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மூலவர் மந்திராசலமூர்த்தி / தண்டாயுதபாணி / வேலாயுத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். வேலாயுதம் தனது 12 கைகளுடன், சேவல் சின்னம் கொண்ட கொடியையும், இடது கையில் சேவலையும் ஏந்தியபடி அருள்பாலிக்கிறார்.

Exit mobile version