திருப்பூர் மாவட்டத்தில், படியூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு சொந்த பஸ் கிடைத்துள்ளது.மாணவ, மாணவியர் உற்சாக பயணம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி யில், 1,100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.ரோஸ்கார்டன் பகுதிகளிலிருந்து, படியூருக்கு பஸ் வசதி இல்லை. அப்பகுதி மாணவர்கள், தினமும் வாடகை வாகனங்களில் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மாணவர்கள், பெற்றோர்களின் எதிர் பார்ப்பை உணர்ந்து கொண்ட ஊராட்சி தலைவர் ஜீவிதா, தனது சொந்த பணத்தில் இருந்து, 16 லட்சம் ரூபாயில் 50 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பள்ளிக்கு பஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
7 கி.மீ.,சுற்றுப்பகுதி வரை பஸ் இயக்கப்பட்டு, பள்ளி நேரம் முடிந்த பின், மாலையில், வீடுகளுக்கு கொண்டுவிடப்படுவர். இதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் பெற்றோருக்கு ஏற்பட்டு வந்த நிதிச்சுமை தவிர்க்கப் படும். பள்ளிக்கு மாணவர் வருகைப்பதிவு சிறப்பாக அமையும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில், ஜி.பி.எஸ்., ‘சிசிடிவி’ கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பஸ் இயக்கத்தை மொபைல் போனிலேயே கண்காணிக்க முடியும். இந்த பஸ் ஊழியர்களின் சம்பளத்தையும், ஊராட்சி தலைவர் ஜீவிதாவே ஏற்றுக் கொண்டது
குறிப் பிடத்தக்கது.
பள்ளி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள பஸ், நேற்றுமுதல் இயக்கத்தை துவக்கியுள்ளது. அமைச்சர் சாமிநாதன், கொடியசைத்து பஸ் இயக்கத்தை துவக்கி வைத்தார்.