திருப்பூர் – மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 4 நாட்களில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய இன்பன்ட் ஜீசஸ் பள்ளி

திருப்பூர் குமார்நகர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்
3-ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாஸ்வேதா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 40 நாட்களாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு குறிப்பட்ட ஊசி போட்டால் மட்டுமே மாணவியின் உயிரை காப்பாற்ற முடியும் என்ற சூழலில், அதற்கான பொருளாதாரம் இல்லாமல் மாணவியின் பெற்றோர் தவித்து வந்தனர். பள்ளியின் தாளாளர் எட்வர்டு ஞானசேகரின் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்- ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பள்ளியின் நலவிரும்பிகளிடம் மாணவிக்காக கடந்த 4 நாட்களில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் நிதி திரட்டப்பட்டது. மகாஸ்வேதா
பள்ளியில் இந்த ஆண்டுதான் சேர்ந்து ஒரு சில நாட்கள் மட்டுமே
பள்ளிக்கு வந்திருந்தாலும் மாணவியின் உயிரை காப்பாற்றவேண்டும்
என்ற நோக்கத்துடன் உதவி செய்த திருப்பூர் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வோம் .மொராக்கோவின் வண்ணமயமான மராகெச் சந்தைகளில் துடிப்பான மசாலா மற்றும் தேநீர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version