நனவானது 65 ஆண்டு கால கனவு திட்டம்
திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 3 தலைமுறைகளை கடந்த 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இன்று (ஆக.17) செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் இத்திட்டத்தை இன்று சனிக்கிழமை சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக இருந்து வந்தது. இத்திட்டம் ரூ.1916.41 கோடி செலவில், பணிகள் நிறைவுற்று துவங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 1,045 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களில் உள்ள 50 லட்சம் மக்கள் முதல் பயன்பெறுகின்றனர்.
