சனிக்கிழமை, அமாவாசை, சனிப் பெயர்ச்சி ,சூரிய கிரகணம் அனைத்தும் ஒரே நாள்கிரகண நாளில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்? அமாவாசை நாளில், சூரிய கிரகணமும் இணைந்து வருவதால் தர்ப்பணம் கொடுக்கலாமா?

இந்த ஆண்டு பங்குனி மாத அமாவாசை,வருகின்ற மார்ச் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி உடன் இணைந்து, சனிக்கிழமையில் வருகிறது. சனிக்கிழமை, அமாவாசை, சனிப் பெயர்ச்சி ,சூரிய கிரகணம் ஆகிய அனைத்தும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். அதனால் இது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.கர்மாக்களுக்கு காரணமான கிரகம் சனி பகவான். பொறுப்பு, ஒழுக்கம், வாழ்க்கை ஒழுங்காக அமைவதற்கும் காரணமானவர் சனி பகவான் தான். சனி பகவானு உரிய சனிக்கிழமையில் சனிப் பெயர்ச்சியம், முன்னோர்களை பெறுவதற்குரிய நாளான அமாவாசையும் இணைந்து வருவது அதீத சிறப்பு பெற்றதாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபட்டு, தர்ப்பணங்கள் செய்வதாலும், சனி பகவான் மற்றும் சிவ பெருமானை வழிபடுவதாலும் , சனி பகவானுக்குரிய மந்திரங்களை உச்ச்ரிப்பதாலும் கர்மவினைகள், பாவங்கள் நீங்கும். பித்ரு தோஷத்தில் இருந்து விடுபடுவதுடன், முன்னோர்களின் ஆசியையும் பெற முடியும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பம் கொடுப்பதும், விளக்கேற்றி வழிபடுவது, ஏழைகளுக்கு எள் தானம் அளிப்பது, பசு மற்றும் பறவைகளுக்கு உணவு அளிப்பது என்பன போன்ற விஷயங்கள் பித்ருக்களின் ஆசியை மட்டுமின்றி, சனி பகவானின் அருளையும் பெற்றுத் தரும். ஆனால் அமாவாசை நாளில், சூரிய கிரகணமும் இணைந்து வருவதால் தர்ப்பணம் கொடுக்கலாமா? கிரகண நாளில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்? மார்ச் 29ம் தேதியான நாளை இந்திய நேரப்படி பகல் 02.20 மணிக்கு துவங்கி, மாலை 04.17 மணிக்கு உச்சமடைந்து, மாலை 06.15 மணிக்கு கிரகணம் நிறைவடையும் என சொல்லப்பட்டுள்ளது. மார்ச் 28ம் தேதி இரவு 07.25 மணிக்கே அமாவாசை திதி துவங்கி, மார்ச் 29ம் தேதி மாலை 05.12 மணி வரை உள்ளது. பொதுவாக தர்ப்பணம் கொடுப்பவர்கள் சூரிய உதய நேரம் துவங்கி, உச்சிப் பொழுது வரை கொடுக்கலாம். பகல் 12 மணிக்கு பிறகு செய்யப்படும் தர்ப்பண காரியங்களை சூரிய பகவானும், முன்னோர்களும் ஏற்பதில்லை என சொல்லப்படுகிறது.

Exit mobile version