தமிழக நீச்சல் அணியில் திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், திருநெல்வேலியில், தமிழக நீச்சல் அணி வீரர், வீராங்கனைக்கான தேர்வு கடந்த 08/10/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
இதில் குமார்நகர் மாநகராட்சி |மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி அர்ச்சனா 50மீ, 100மீ, 200மீ, பேக்ஸ்டோக், 400மீ தொடர் நீச்சல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வெற்றி பெற்று தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இதன் மூலம், தேசிய நீச்சல் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு, மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், 15 வேலம்பாளையம் ட்ரிக் ஸ்போர்ட்ஸ் அகாடமி உரிமையாளரும் தலைமை பயிற்சியாளருமான சிவகுமார் மற்றும் துணை பயிற்சியாளர் அகில் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.