பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் ஊக்கத் தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி பதிவு செய்வதற்கான கால அளவு 31.03.2025 வரை நீட்டிப்பு

வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் பிரதம மந்திரி இன்டன்ஷிப் திட்டத்தின்கீழ், மாணவர்கள் பதிவு செய்வதற்கான கால அளவு 31.03.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொழிற்பயிற்சி வழங்கி நிறுவனங்களில்
வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியின்போது பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பயிற்சி காலத்தில் ஒருமுறை உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். வயது வரம்பு 21 முதல் 24 வரை ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். முழுநேர பணியாளர்கள், தற்போது படித்துக்கொண்டிக்கும் மாணவ-மாணவிகள் ,தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றவர்கள், மத்திய, மாநில அரசின் கீழ் ஏதாவது ஒரு திட்டத்தின் பயிற்சி பெற்று வருபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. பயிற்சியில் சேர விரும்புவோர் www.pminternship.mca.gov.in என்ற இணைதளம்
மூலம் விண்ணப்பிக்கலாம்.