நேற்று (12.02.2024) முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை அனுமதி

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் மலைப்பாதை மிகவும் கரடுமுரடானதாக இருக்கும். இந்த
மலைப்பாதையில் ஏற பக்தர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு 2023 இல் பிப்ரவரி மாதம் 17-ந் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.இந்த ஆண்டு 2024 இல் இருந்து பிப்.1ம் தேதி முதல், மலையேற அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு வனத்துறையினர் மறுத்து வந்தனர். பக்தர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்ததையொட்டி பிப்.12ம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்களை அனுமதிக்க வனத்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முதல் (12.02.2024) பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறை அனுமதி வழங்கியது. பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.