திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச LKG மற்றும் 1 ஆம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பிக்கும் தேதி 22.04.2024 முதல் 20.05.2024

பெற்றோர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட விவரம் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக (sms ) அளிக்கப்படும்.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம், அரசு இ-சேவை மையங்கள் ஆகிய இடங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பதிவேற்றம் செய்யலாம்.
இந்த திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் குலுக்கல் முறையில் அடுத்த மாதம் 28-ந் தேதி அன்று அந்தந்த பள்ளிகளில் நடைபெறும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளரின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்பே சேர்க்கை வழங்கப்படும்.
