Blog

சாலையில் கிடந்த ரூ.35 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தையல்காரரின் நேர்மைக்கு பாராட்டு

அவிநாசி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பசுவராஜ். தையல் தொழிலாளியான இவர், அவிநாசி சார்பதிவாளர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையோரம் கிடந்த ரூ.35 ஆயிரத்தை எடுத்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீஸார், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். பணத்தை தவறவிட்டவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.