
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம் 2025
பௌர்ணமி என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது திருவண்ணாமலை கிரிவலம் தான். வருடத்தின் அனைத்து பவுர்ணமியிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது சிறப்பானது என்றாலும், சித்திரை, ஐப்பசி, கார்த்திகை உள்ளிட்ட சில மாதங்களில் வரும் பவுர்ணமியில் கிரிவலம் வருவது பாவங்களை போக்கி, புண்ணியங்களை தருவதுடன், அளவில்லாத நலன்களையும் நமக்கு பெற்றுத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலை கோவிலில் வழிபாடு நேரம்
சித்ரா பௌர்ணமி நாளில், அருணாசலேசுவரர் கோவில் காலை 4:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை திறக்கப்பட்டிருக்கும்
போக்குவரத்து வசதிகள்
திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்காக, 2,800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கிரிவலம் பாதையில் 85 சுகாதார உதவி மையங்கள் & 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. 5,000 போலீசாரும், 27 வாட்ச் டவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்
கிரிவலத்திற்கு உகந்த நேரம்:
துவக்கம்: மே 11, 2025, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:01 மணி
முடிவு: மே 12, 2025, திங்கட்கிழமை, இரவு 10:25 மணி
இந்த நேரத்தில் கிரிவலத்தை தொடங்குவது சிறந்தது.