Blog
அரசு பணியாளர்களுக்கான தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி : பூமலுார் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வு
தேசிய அளவிலான தமிழக அரசு பணியாளர்களுக்கான
டேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, அரசு பணியாளர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதற்கான தேர்வு பொதுப்
பிரிவு மற்றும் 40 வயதுக்கும் மேற்பட்ட வீரர்கள் என இரண்டு பிரிவுகளாக சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இந்த அணியில்,தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை தேர்வு செய்யப்பட்டனர். இந்த அணியில் பல்லடம், பூமலூர் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமாரும் இடம்பெற்றுள்ளார்.
