Blog

பங்குனி உத்திரம் 2025 எப்போது ? அன்று என்ன செய்யலாம் ? பங்குனி உத்திரத்தின் சிறப்புகள் & விரத பலன்கள்

2025 பங்குனி உத்திரம்

இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது.

2025 பங்குனி உத்திரம் எப்போது?

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி பிற்பகல் 12 மணி 24 நிமிடத்திற்கு தொடங்கி, ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 3 மணி 10 நிமிடத்திற்கு முடிவடைகிறது.

பங்குனி உத்திரத்தின் முக்கியத்துவம்

பல தெய்வங்களின் திருமணம் நடந்த நாள் தான் பங்குனி உத்திரம். அதனால் பங்குனி உத்திரம் விரதம் இருந்தால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. குறிப்பாக இந்த நன்னாள் முருகப் பெருகானுக்கு மிகவும் உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பார்வதி – பரமேஸ்வரன், ஆண்டாள் – ஸ்ரீரங்கநாதர், தெய்வானை – முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.

தானம் மற்றும் தர்மம்: பங்குனி உத்திர நாளில் தானம் கொடுப்பது, தர்ம செயல்களில் ஈடுபடுவது மிகவும் புண்ணியமான காரியமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்வதால், நம்முடைய பாவங்கள் நீங்கி, நற்பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பங்குனி உத்திர நாளில், தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக முருகன் கோயில்கள் மற்றும் சிவன் கோயில்களில் இந்த நாள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும்

இந்த நாளில் இறைவனை வழிபடுவதன் மூலம், நம்முடைய வாழ்வில் செல்வம், பொருள், ஆரோக்கியம் போன்ற அனைத்து நற்பேறுகளையும்  பெறலாம்.

பங்குனி உத்திர விரதம் இருப்பது எப்படி ?

அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருக பெருமானை வணங்க வேண்டும்.கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம்.‘ஓம் சரவண பவ’ என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம்.அன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். பால், பழம் போன்றவற்றை உண்டு விரதம் இருக்கலாம் ,நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள்
கோயிலிற்கு செல்லலாம்.

Namma Tirupur

Namma Tirupur, your gateway to the vibrant and dynamic city of Tirupur! We’re your go-to source for all things related to Tirupur’s culture, lifestyle, attractions, and more. Our channel is dedicated to showcasing the heart and soul of this incredible city, giving you an insider’s perspective on what makes Tirupur truly special.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
wpChatIcon
Enable Notifications OK No thanks