திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருமுருகன்பூண்டி கோவில்வழி புறவழிச்சாலை!

திருப்பூரில் இருந்து அவிநாசி, பெருமாநல்லுார், பல்லடம், தாராபுரம் செல்லும் ரோடுகள் நெரிசல் மிகுந்ததாகவும், ஊத்துக்குளி, காங்கயம், மங்கலம் ரோடுகள் சற்று நெரிசல் குறைந்ததாகவும் உள்ளன.மாநகருக்குள் நாளுக்கு நாள் ஏற்படும் தெரிசலை கட்டுக்குள் கொண்டு வர, ஒரே வழித்தடத்தில் நுழையும் வாகனங்களை புறவழிச்சாலை வழியாக மாற்று வழித்தடத்தில் திருப்பி விட திட்டமிடப் பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருமுருகன்பூண்டி, கோவில்வழி இடையே புதிய புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை மற்றும் ஆய்வு பணிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. தொடர் கணக்கெடுப்புகளில் அவிநாசியில் இருந்து பல்லடம் மற்றும் கோவில்வழிக்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அவிநாசி மங்கலம் பல்லடம் சாலையை அகலப்படுத்தவும், திருமுருகன் பூண்டி கோவில்வழி இடையே புதிய புறவழிச் சாலை அமைக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. முதல் கட்ட பணிகளுக்கு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு துாரம்,சாலையின் நீள, அகலம் குறித்து ஆய்வுகளுக்கு பின் முடிவெடுக்கப்படும்.